Saturday, 18 April 2015

வலய மட்ட துடுப்பாட்டத்தில் 1 ம் 3 ம் இடங்கள்

    அண்மையில் கடந்த march மாதத்தில்  நடைபெற்ற வலய மட்ட துடுப்பாட்டத்தில் தாரணி தலைமையில் களமிறங்கிய  19 வயதின் கீழான பெண்கள் வலயச் champion   களாக தெரிவாகியுள்ளனர்.   19 வயதின் கீழான ஆண்கள் அணியினர்  3 ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். பொறுப்பாசிரியராக மதிதரன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களாக திரு.சிவரூபன் ,திரு.சுகிர்தன் ஆகியோர் திகழ்கின்றனர்.

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்

Wednesday, 15 April 2015

மரண அறிவித்தல்,

Regret to inform that Mr Krishnapillai (nickname Mayavar) father to Mr Sasikumar, current JVC OSA - committee member, sadly passed away in Sri Lanka today.  Funeral details will be updated here later.  Mr Sasikumar  07817 103 378.

வலய மட்ட வலைப் பந்தாட்டத்தில் 2 ம் 3 ம் இடங்கள்

     துஷ்யந்தி தலைமையில் களமிறங்கிய 17 வயதின் கீழான அணியினர் வலய மட்ட வலைப் பந்தாட்டத்தில்   2 ம் இடத்தினை தமதாக்ககிக்கொண்டனர். இதே வேளையில் தர்சனா தலைமையில் 19 இன் கீழான அணியினர்  3 ம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்.விளையாட்டுத் துறை பொறுப்பாசிரியர் சிவச்செல்வன் அவர்களும் திரு.கஜேந்திரன் அவர்களும் இவர்களிற்கான பயிற்சியை வழங்கி வருகின்றனர்

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்

கரப்பந்தாட்டத்தில் வலயத்தில் முதலிடம்

     முதற் தடவையாக கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட கரப்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கோ.கிரிஷாந் தலைமையில் களமிறங்கிய 19 வயதின் கீழான கல்லூரி அணி  கரப்பந்தாட்டத்தில் வலய CHAMPION ஆக தெரிவாகியுள்ளது. இதே சுற்றுப் போட்டியில் மோ.எழில்தரசன் தலைமையில் களமிறங்கிய 17 வயதின் கீழான அணியினர் 2 வது இடத்தினையும் பொ. சர்மிளன் தலைமையில் களமிறங்கிய 15 வயதின் கீழான அணியினர் 3 வது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.                                                                                                 இவ் அணியினர்க்கு பொறுப்பாசிரியராக திரு.திருக்குமரன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களாக திரு.தீபன்,திரு.திருக்குமரன், திரு.சிவச்செல்வன்  ஆகியோர் கடமையாற்றிவருகின்ற்றனர்.

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்

Tuesday, 14 April 2015

நிர்வாக சபைக்கூட்டம் 12/04/2015

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாகசபைக் கூட்டம் 12.04.2015 அன்று திரு . ராஜன் தலைமையில் திரு . உலகநாதன் அவர்களின் இல்லத்தில் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் வருகை தந்துள்ளார்கள். 
இக்கூட்டத்தில் பல முக்கிய விடையங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. எமது கல்லூரியின் தற்போதைய நிலை குறித்து பல மணி நேர விவாதத்தின் பின் எமது ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் திரு . உலகநாதன் அவர்களை எமது கல்லூரிக்கு அனுப்பி  கல்லூரியின் நிர்வாகம், கல்லூரி வளாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், மற்றும் பழைய மாணவர் சங்கம் எல்லோருடனும் கலந்து பேசி எதிர்காலத்தில் எமது கல்லூரியின் வளர்ச்சி பாதைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி எமது ஒன்றியத்தால் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இணையத்தளம் தொடர்ந்து இயங்குவதற்கு எமது ஒன்றிய நிர்வாகக் குழு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
. மேலும் எமது ஒன்றியம் இருபதாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது. எமது ஒன்றியம்
இந்நிகழ்வாக ஆடிமாத முற்பகுதியில் கலைவிழா ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. 
அத்துடன் எமது ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக இருபது வருடங்களாக அயராது உழைத்து வரும் ஒன்றிய உறுப்பினர் திரு . த. உலகநாதன் அவர்கள் ஒன்றியத்தின் நிரந்தரப் போஷகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எமது நிர்வாக சபைக்கூட்டம் திருமதி . உலகநாதன் அவர்களின் தமிழ் புத்தாண்டு விருந்தோம்பலுடன் இனிதே  நிறைவேறியது. அவர்களுக்கு எமது ஒன்றியம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

தகவல் : தா.கமலநாதன்

மரதன் ஓட்டப் போட்டி






14 - 04 - 2015 புது வருடப் பிறப்பு தினமன்று காலை மரதன் ஓட்டப் போட்டியுடன் ஆரம்பமாகி மாலையில் ஏனைய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். போட்டி ஒழுங்கமைப்பினை விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் திரு. வ. மகேஸ்வரன் அவர்களுடன் துணைப் பொறுப்பாளர் செல்வி.சி.கஸ்தூரி அவர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.



Monday, 13 April 2015

க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

      கடந்த எட்டாம் திகதி எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று நடை பெற்றது.
   "அறிதல்: கற்றிடக் கற்றல்" எனும் நூலின் ஆசிரியரும், மருத்துவபீட விரிவுரையாளரும், பாடசாலை அபிவிருத்திச்சஙக செயலாளருமான டாக்டர் கண்ணதாசன் இங்கு உரையாற்றினார்.
   அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்கள் கற்கவேண்டிய முறைகள், பெற்றோரின் பங்கு போன்றன  கலந்துரையாடப்பட்டன.
     இவ்வாறான பல தொடர் கருத்தரங்குகள் தொடர்ந்து நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
 
தகவல் : து. இரவீந்திரன்