Friday, 1 May 2015
Thursday, 30 April 2015
ஆறுமுக வித்தியாலய அறிவித்தல்
வலிகாமம் கல்வி வலய முறைசாரப் பிரிவிவினர் நடாத்தும் பாடசாலையை விட்டு விலகியோர்க்கான கணினிப் பயிற்சிநெறி ஆறுமுக வித்தியாசாலையில் மே மாதம் ஆரம்பமாகவுள்ளது. முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி நெறியில் தற்போது பாடசாலைக் கல்வியைத் தொடராத எவரும் பயிற்சி பெறலாம் பாடசாலை அதிபரிடம் பதிவுகளை மேற்கொள்ளவும்
தகவல் : திரு இரவிசங்கர் - Web Team (OSA-UK)
தகவல் : திரு இரவிசங்கர் - Web Team (OSA-UK)
Tuesday, 28 April 2015
BAND வாத்தியக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் எமது
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி Band வாத்தியக் குழு மாணவர்களுக்கு 79,900 ரூபா பெறுமதியான புதிய சீருடைகள் கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க எமது ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ளது. எமது கல்லூரி Band வாத்தியக்குழு மாணவர்கள் எமது கல்லூரி நிகழ்ச்சிகளிலும், எமது கிராமத்தின் நிகழ்வுகளிலும் எல்லோராலும் பாராட்டத்தக்க முறையில் நல்ல சேவையினை ஆற்றிவருகிறார்கள், என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களின் இசை ஆர்வத்திற்கும், நற்சேவைக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
தகவல் : தா.கமலநாதன்
Sunday, 26 April 2015
அமரர் சுப்பையா உடையார் ஞாபகார்த்தத் திறந்தவெளி அரங்கு கட்டட நிர்மாண வேலைகள் மிகவும் துரித கதியில் நடைபெற்றறு வருகின்றன.
எமது கல்லூரி வரலாற்றில் ஒரு மைற்கல்லாகத் திகழவிருக்கும் இவ்வேலைத்திட்டம், கனடா பழையமாணவர்சங்கத்தினூடாக, சுழிபுரம் அமரர் சுப்பையா உடையாரின் வாரிசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம், மிகவிரைவில் பூர்த்தியாகி அனைவருக்கும் பயன்தரும்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணசாமி சிவச்சந்திரன்
(சிவம்)
பிறப்பு : 6 ஒக்ரோபர் 1981 — இறப்பு : 23 ஏப்ரல் 2015
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி சிவச்சந்திரன் அவர்கள் 23-04-2015 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
54 Avenue des Friches,
93600 Aulnay-sous-Bois,
France.
தகவல்
குடும்பத்தினர்
(சிவம்)
பிறப்பு : 6 ஒக்ரோபர் 1981 — இறப்பு : 23 ஏப்ரல் 2015
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி சிவச்சந்திரன் அவர்கள் 23-04-2015 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி(மாயவர்) சற்குணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பையா தம்பதிகள், முருகேசு சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகள், காலஞ்சென்ற நடராஜா, ஆச்சியம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற செல்வசோதி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரன்(பிரான்ஸ்), அம்பிகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவி(முறுங்கன்), செல்வன்(பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி(பிரான்ஸ்), செல்வநாதன்(பிரான்ஸ்), பாரதி(முறுங்கன்), சிவகுமார்(சிவா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தட்ஷாயினி, துர்க்காயினி, தசிகரன், மயூரன், காலஞ்சென்ற சுவேதா, மோகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்சிகா, தணுகா, தரணிகா, வைஸ்ணவன், தாரிகா, தர்ஷானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்வின் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:54 Avenue des Friches,
93600 Aulnay-sous-Bois,
France.
தகவல்
குடும்பத்தினர்
| சந்திரன் — பிரான்ஸ் | |
| செல்லிடப்பேசி: | +33627503825 |
| சிவா — பிரான்ஸ் | |
| தொலைபேசி: | +33148661049 |
| செல்லிடப்பேசி: | +33651195679 |
| அம்பிகா — பிரான்ஸ் | |
| செல்லிடப்பேசி: | +33627118061 |
Saturday, 18 April 2015
நம் பாரம்பரிய கலைகளை நினைவு கொள்ள பண்டிகைகள் நல்ல வாய்ப்பு!-
தடை தாண்டல், வண்டில் ஓட்டம், தேசிக்காய் கரண்டி, தலையணை அடித்தல், முட்டி உடைத்தல், வழுக்கு மரம்
ஏறுதல் போன்ற விளையாட்டு போட்டி நிகழ்வுகளும் பேச்சுப்போட்டி, நடனங்கள், சிலம்பாட்டம், நகைச்சுவை நாடகம், பட்டி மன்றம், கற்பனை சரித்திர நாடகம் போன்ற அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
சித்திரைக் கொண்டாட்டம் பல இடங்களில் நடைபெறுகின்றது. பலர் பலவாறாக
கொண்டாடுகின்றார்கள். அவரவர் சிந்தனைகள் மனப்போக்குகள் கொண்டாட்டங்களில்
வெளிப்படும்.
பண்டிகைகள் எல்லாமே அநேகமாக அவரவர் பண்பாடுகளையும் அன்பு நெறி
வெளிப்பாட்டையுமே வெளிப்படுத்த அன்று முன்னோர்களால் வகுக்கப்பட்டவை. ஆனால்
காலம்செல்ல நவீனயுகத்தில் பண்டிகைகள் பல தமது சுயவடிவத்தை இழந்துபோய்விட்டன.
இன்று இங்கே சித்திரைக் கொண்டாட்டத்தை நடத்திய சனசமூக நிலையமும்
விளையாட்டுக் கழகமும் நல்லதை சிந்தித்திருக்கின்றார்கள். நமது பண்பாடுகளை
நினைவுபடுத்தியிருக்கின்றார்கள்.
தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருக்கக்கூடிய நமது மண்ணில் இன்று
அரைகுறை ஆடைகளோடு எங்கிருந்தோ ஒரு தரப்பு ஆடவும் இன்னொரு தரப்பு இசை நிகழ்ச்சி
என்ற போர்வையில் கூச்சலையும் கும்மாளத்தையும் விதைப்பதையும் பல இடங்களில் நாம்
காண்கின்றோம்..
பண்டிகைகள் எமது சமூகத்தின் பண்பாட்டின் வெளிப்பாடாக அமையவேண்டும்.
வலய மட்ட எல்லே CHAMPION
APRIL 8 ம் திகதி நடைபெற்ற வலய மட்ட எல்லே போட்டியில் தனராஜ் தலைமையில் களமிறங்கிய 19 வயதின் கீழான ஆண்கள் அணியினர் வலய CHAMPION களாக தெரிவாகியுள்ளனர்.பொறுப்பாசிரியராக திரு.சிவச்செல்வன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களாக திரு.சிவரூபன் , திரு.சுகிர்தன் ஆகியோர் திகழ்கின்றனர்.
தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்
தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்
Subscribe to:
Posts (Atom)
