Wednesday, 1 August 2018

Thurai Irai Monday

மதுஹரிக்கு விக்ரோறியா இராச்சியத்தின் பெருமிதம் பொங்கும் வாழ்த்துக்கள்

இலங்கையின் பிரதம மந்திரி கெளரவ திரு.ரணில் விக்ரமசிங்க அவர்களிடமிருந்து விக்ரோறியாக் கல்லூரியின் சிரேஷ்ட மாணவ தலைவி செல்வி மதுஹரி சத்தியலோகநாதன் விஷேட திறமைகளை வெளிப்படுத்தியமைக்கான சான்றிதழைப் பெற்றுள்ளார்.கல்வி அமைச்சின் சுபஹ புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தில் விஷேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றில் வழங்கப்பட்டுள்ளது.எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக தேவைப்படும் படைப்பாற்றலுடன் கூடிய இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.புதிய கண்டுபிடிப்பு,அழகியல்,விளையாட்டுத்துறைகளில் விஷேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு இக்கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.மதுஹரிக்கு அழகியற் பிரிவில் விஷேட திறமைகளை வெளிப்படுத்தியமைக்காக இவ்வுயரிய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மதுஹரிக்கு விக்ரோறியா இராச்சியத்தின் பெருமிதம் பொங்கும் வாழ்த்துக்கள்.ALWAYS FEEL HIGH,
WE ARE VICTORIANS.

Thursday, 15 February 2018

JVC,Encouragement for the students who got university entrance in 2017


சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி (2017) உயர்சித்தி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணணிகள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கும் நிகழ்வு அதிபர் சத்தியகுமாரி சிவகுமார அவர்களின் தலைமையில்  வழமைபோல் அவுஸ்ரேலியா மெல்போர்ன் பழைய மாணவர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரியின் மாணவியும் முன்னாள் ஆங்கில ஆசிரியையுமான திருமதி செல்வராணி தேவராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். முன்னாள் அதிபர் வ.ஸ்ரீகாந்தன் , அவுஸ்ரேலியா மெல்போர்ன் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு ஸ்ரீ குமரன் அவர்களின் துணைவியார் திருமதி அனுராதா , அவரது புதல்வன் திரு.மாலவன்  மற்றும் சுழிபுரம் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு அ.கிருபானந்தமனுநீதி ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். மூன்று மாணவர்கள் மடிக்கணணியும் பத்து மாணவர்கள் தலா இருபதினாயிரம் பணப்பரிசும் பெற்றுக் கொண்டனர்.

Sunday, 26 November 2017

ஆறு..திருமுருகன் அவர்களின் சிறப்புரை.- பாரதி கலை மன்றம்

க.பொ.த.(சா.த) 2017 மாணவர்களிற்கான விஞ்ஞான கருத்தரங்கு

உப-அதிபர் திரு.அ.சேந்தன் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் யாழ்  விஞ்ஞான பீட மாணவர்களினால் விஞ்ஞான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.






செய்முறை விளக்கங்களுடனான கருத்தரங்கு சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்திலும் செய்முறைப் பயிற்ச்சிகள் விஞ்ஞான ஆய்வு கூடங்களிலும் நடைபெற்றன.