Monday 26 November 2012

மரண அறிவித்தல்-கலாபூசணம் நடேசன் சிவசண்முக மூர்த்தி

 
 
 
சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நடேசன் சிவசண் முகமூர்த்தி (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் வலிகாமம் வலயம்) நேற்று (25.11.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசன் வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், திருமதி லோகாம்பிகையின் அன்புக் கணவரும், சிவகௌரி (பரிசோதகர் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை), சிவரஞ்ஜனி (ஆசிரியர் யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) சிவசங்கரன் (ஜனசக்தி காப்புறுதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான குருபரன், பரமேஸ்வரன், அன்னபூரணம் மற்றும் தெய்வநாயகி, மால்மருக மூர்த்தி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற கமலாம்பிகை, ஞானாம்பிகை, ராதாகிருஸ்ணன் மற்றும் பால கிருஸ்ணன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (25.11.2012) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் திருவடி நிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

_____________________________________________________________________________________________

விக்ரோறியாக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்கள் இன்று (25/11/2012) அதிகாலை 1.00 மணியளவில் இறைபதமடைந்தார். சமயபாட ஆசிரியரான இவர், சமய பிரசங்கங்கள் செய்வதில் வல்லவர். மேலும், குரல்வளம் மிக்க இவர், நாட்டார் பாடல்கள் பாடுவதில் தன்னிகர் இல்லாதவர். பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சமயமும் பாடசாலையின் புகழும் பரவ உதவியவர். அன்னாரின் உற்றார், உறவினர், நண்பர்களின் துயரில் பங்குகொள்வதொடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, விக்ரோறியாக்கல்லூரியின் யூ.கே பழைய மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.