Friday 6 November 2015

காட்டுப்புலம் அரசினர் சைவத் தமிழ் கலவன் பாடசாலை பரிசளிப்பு 2015

காட்டுப்புலம் சைவத் தமிழ் கலவன் பாடசாலையில் 2015 ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திப் புள்ளியான 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களிற்கான பரிசில்களும் ஏனைய மாணவர்களிற்கு ஆறுதல் பரிசில்களும் நவ.4.2015 அன்று  வழங்கப்பெற்றன .


பாடசாலை அதிபர் தலைமையிலும் ,ஆஸ்திரேலிய விக்ரோரியா ப.மா.சங்க மெல்போர்ன் கிளையினரின் அனுசரணையுடனும் திரு.க.செந்தில்நாதன் அவர்களிகன் ஒருங்கிணைப்புடனும்  நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவரான பிரம்மஸ்ரீ.வ.ஸ்ரீகாந்தன் அவர்களும் ,விருந்தினராக க.அ.குழுவின் செயலாளர்  கலாநிதி.செ.கண்ணதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்விற்கு மாணவர்களின் பெற்றார்களும் பாடசாலை சமூகத்தினரும் சமுகம்தந்திருந்தனர் .