Wednesday 16 August 2017

அங்கமும் வேதமும் ஓதும்நாவர்.... தேவாரமும், பொழிப்பும்

பாடல்:

அங்கமும் வேதமும் ஓதும்நாவர்                           அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல்  மதிதவழ் மாடவீதி மருகல்                    நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு                          சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்                      கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை

நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல் சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏனோ ? சொல்வாயாக....