Sunday 4 June 2017

பாடசாலை அபிவிருத்திச்சங்க வருடாந்த பொதுக் கூட்டம்-4/6/2017

கூட்டம் காலை 9:45 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.   தலைவர்,அதிபர் சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் தனது தலைமையுரையின் போது பொருளாளர் திரு.நா.ரமணன் அவர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமூகம் தராத காரணத்தினால் இன்று வரவு-செலவுக் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதனால் இன்றைய கூட்டம் விஷேட பொதுக்கூட்டமாகவே நடாத்தப்படவுள்ளதாக கூறி சபையோரிடம் மன்னிப்புக் கோரினார்.
           எனினும் இன்றைய கூட்டத்தின்போது 2017 ம் ஆண்டிற்கான நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பும் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அத்துடன் மாணவர் ஒழுக்கம் , 2018 ம் ஆண்டிற்கான அனுமதி ஆகியன தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். வழமையாக பரிசளிப்பு 3 ம் தவணையிலேயே இடம்பெறுவதாகவும் இவ்வருடம் முதல் பரிசளிப்பானது 2ம் தவணையிலேயே நடாத்தப்படவுள்ளதாகவும் கூறி இவை தொடர்பான விபரங்களை பிரதி அதிபர் மதிதரன் அவர்கள் விளக்கமளிப்பார் என அவரிற்கு சந்தர்ப்பமளித்தார்.
 
   இம்முறை பரிசளிப்புத்திட்டம் மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அதன்படி