Monday 18 February 2013

Dr Manoharan - வைத்தியசாலைக்கு நன்கொடை

வலிகாமம் மேற்கு பகுதியின் சிறந்த மருத்துவமனையாக விளங்கும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவுஷ்திரேலியாவை வசிப்பிடமாகவும்,சுழிபுரம் மத்தி சமூக சேவையாளர் திரு . அப்பாத்துரை விதானையாரின் பேரனும் ஆன DR.மனுநீதி -மனோகரன் அவர்கள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையான பல இலட்சம் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சையின் போது
மயக்கமருந்து கொடுக்கும் இயந்திரத்தை வைத்தியசாலையின் DR. சுரேந்திரகுமாரிடம் நன்கொடையாகக் கொடுத்துள்ளார் .DR. மனோகரன் அவர்கள் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவன் திரு .மனுநீதி அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .இவரின் இச்சேவையைப் போல் வெளிநாடுகளில் வசித்துவரும் எமது சுழிபுரம் கிராம வைத்தியர்கள் மூளாய் வைத்தியசாலையை மேலும் ஒரு சிறந்த மருத்துவமனையாகக் கொண்டுவருவதற்கு முன்வர வேண்டும் .
"மக்கள் சேவையே மாண்புமிகு சேவையாகும்"
யுகே பழைய மாணவர் சங்கம் .
See Photo