Wednesday 27 February 2013

நிர்வாக சபைக்கூட்டம்



யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக சபைக்கூட்டம் 24.02.2013 அன்று தலைவர் திருமதி  .பகவதி .தணிகாசலம் தலைமையில் Harrow வில் நடைபெற்றது .
ஒன்றியத்தின் நிர்வாக சபைக்கூட்டத்திற்கு பொருளாளர்,மற்றும் 10 உறுப்பினர்கள் சமூகமளித்து இருந்தனர்.

Tuesday 26 February 2013

சுழிபுரத்தில் 2 மோட்டார் குண்டுகள் மீட்பு

யாழ்.சுழிபுரம் பகுதியில் பாரிய ஆபத்தினை ஏற்படுத்திக் கூடீய 2 மோட்டார் குண்டுகள் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
யாழ்.சுழிபுரப் பகுதியில் பாவணைக்கு உட்படுத்தப்படாத வெற்றுக் காணி ஒன்றினை துப்பரவு செய்வதற்காக சென்றவர்கள் குறித்த மோட்டார் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

Monday 25 February 2013

நினைவஞ்சலி நிகழ்வு - அமரர்.ந.சிவசண்முகமூர்த்தி‏

விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவனும் முன்னாள் ஆசிரயருமான அமரர் நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் கதாப்பிரசங்கக் கலை நூல் மற்றும் நாட்டார் பாடல் இறுவட்டு வெளியீடும் கல்லூரி அதிபர் தலைமையில் றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றன.

Sunday 24 February 2013

Internet, Twitter and Facebook



யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கிவரும் எமது விக்ரோறியாக்கல்லூரியின்  இணையத்தளம் இன்றுடன் பத்து மாதகாலப் பகுதியில் கல்லூரியின் நிலவரங்கள் எல்லாவற்றையும் உண்மை உணர்வோடு எழுதி வருவது யாவரும் அறிந்ததே .எமது

Saturday 23 February 2013

New Girls Toilet

ஆயிரம் பாடசாலைகளுக்கான அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் எமது கல்லூரியில் பெண்பிள்ளைகளுக்கான மலசலகூடத்தொகுதியொன்று அமைப்பதற்கு மத்திய கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளது. சுமார் எட்டு லட்சம் ரூபா செலவில் அமையவுள்ள இம்மலசலகூடத்தொகுதியை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பொறுப்பேற்றுச் செய்வதற்கான ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது பெண்பிள்ளைகளின் மலசலகூடப்பற்றாக்குறை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை கல்லூரியில் ஏற்கனவேயுள்ள பெண் பிள்ளைகளின் மலசலகூடத்தொகுதி சென்றாண்டில் முற்றாகப் புணரமைப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Baden Powell Day

எமது கல்லூரியின் சாரணர் சங்கத்தினரால் பேடன் பவல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சாரணர் கொடியேற்ற நிகழ்வினைத் தொடர்நது அவர்கள் அணிவகுத்து கொடி மரியாதை செலுத்தினர். 
கல்லூரி அதிபர் பேடன் பவல் அவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்தார்.
சாரணர் பொறுப்பாசிரியர் திரு. செ. சிவகுமாரன், பெண் சாரணர் பொறுப்பாசிரியர் திருமதி.தி. கதிர்காமநாதன், கல்லூரி அதிபர் ஆகியோரின் உரைகள் மற்றும் சாரணர்களின் பேச்சு, பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

Friday 22 February 2013

இத்தாலி அனுப்புவதாகக் கூறி 50 இலட்சம் ரூபா பணமோசடி

இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம்50 இலட்சம் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
அம்மோசடி தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா பணத்தினைப் பெற்று ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

Tuesday 19 February 2013

வடக்கு கிழக்கில் கடந்த 5 வருடங்களில் 112 பாடசாலைகள் மூடப்பட்டன; கல்வி அமைச்சர்

இலங்கையில் கடந்த 5 வருடங்களுள் 350 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வடக்கு கிழக்குப் பகுதிகளில் 112  பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Monday 18 February 2013

Dr Manoharan - வைத்தியசாலைக்கு நன்கொடை

வலிகாமம் மேற்கு பகுதியின் சிறந்த மருத்துவமனையாக விளங்கும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவுஷ்திரேலியாவை வசிப்பிடமாகவும்,சுழிபுரம் மத்தி சமூக சேவையாளர் திரு . அப்பாத்துரை விதானையாரின் பேரனும் ஆன DR.மனுநீதி -மனோகரன் அவர்கள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையான பல இலட்சம் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சையின் போது

Saturday 16 February 2013

Sports meet 2013

The Victoria College Sports Meet held today was a resounding success.  Luckily after yesterdays heavy rain, the day was clear and rain free.  Approximately 7000 parents, relatives, friends and

Friday 15 February 2013

Electronic Invitation - Sports meet & Interval performance program

The School Community invites you to our Annual Inter-house Athletic Meet 2013 and spectacular sports meet interval performance.  For the very first time ever in our school history, 250 students are simultaneously taking part in the interval performance program.  Come and see our talented students and what they are capable of both on the track participating in the sports meet and performing during the interval under the guidance of our equally talented teachers and co-ordinators. 

Wednesday 13 February 2013

சிரம தானம்

பாடசாலை மாணவர்கள் வருடாந்த மெய்வல்லுனர் போட்டிக்காக பாடசாலை சூழலை சுற்றப்படுத்தும் புகைப்படங்கள் .

 

Sportsmeet Invitation



வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

2013 ஆம் ஆண்டிற்கான சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்
போட்டி எதிர்வரும் 16.02.2013 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது .இந்த இல்ல விளையாட்டுப்போட்டி எமது கல்லூரியின் அதிபர் வ .ஸ்ரீகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது .

Tuesday 12 February 2013

Rahini family's Visit - More photo received

எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக கல்லூரியின் பழைய மாணவியான திருமதி.றோகினி மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார்.

Victorians Champion

பொன்னாலை சனசமூகநிலையத்தால் நடாத்தப்பட்ட 10 பரிமா ற்றங்கள் கொண்ட கிரிகெட் சுற்றுப்போடியில் சுழிபுரம் விக்டோரியான்ஸ்  விளையாட்டுக்  களகம்  சம்பியன் ஆனது .

Monday 11 February 2013

Netball Competition

சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் வலைப்பந்தாட்டப் போட்டியொன்றை இன்று நடாத்தியது. 19வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான இச் சுற்றுப் போட்டியில் எமது கல்லூரியின் அணியும் கலந்து கொண்டது.

Sunday 10 February 2013

JVC-OSA Noticeboard

136 years old Victoria College is getting stronger in the academic, athletic and cultural sectors day by day. Thanks for the principals, teachers and well wishers. This site has been created to unite all OSA's and all old students who are away from our homeland.

தை அமாவாசை : தலைமுறைகள் செழிக்க வழிபடுங்களேன

பூலோகம் வந்த முன்னோர்கள் மீண்டும் பிதுர்லோகம் செல்லும் தை அமாவாசை நாளில் புனித நீராடி, அவர்களுக்கு எள்ளும் நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள். பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்திலிருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறை வேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர்.

Friday 8 February 2013

Canteen Project – Update

Work for the new canteen which started on 27th January 2013 has been progressing very well.  However, this week we lost 3 days of work .  Sunday being designated as a rest day and Monday and Tuesday weather conditions were so adverse with heavy rain, the work was suspended. Work started again from Wednesday with great speed and determination to make up for the days lost.  

Wednesday 6 February 2013

We are on Twitter and Facebook now

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்டு வரும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் தகவல் பரிமாற்ற இணையத்தளம் அனைத்து புலம்பெயர்ந்து வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொண்டு இருக்கின்றது.

Monday 4 February 2013

எஸ். சிவானந்தன் மீண்டுமொருமுறை தனது புகழ் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் விக்டோரியா கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவருமான கலாநிதி. எஸ். சிவானந்தன் மீண்டுமொருமுறை தனது புகழ் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார். யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான இவர், யாழ் மருத்துவ பீ டத்திலே உயிர் இரசாயனவில பிரிவில் விரிவுரையாளராக்க் கடமையாற்றியவர்.

குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம்

பாடசாலை செல்லும் மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு யாழ். மாவட்ட பொது அமைப்புகள் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், குற்றச் செயல்களை அடுத்தே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Saturday 2 February 2013

Canteen கண்ணோட்டம் (இவர்களின் கனவு நனவாகின்றது)

எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 136 வருடங்கள் ஆகிவிட்டஇக் காலப்பகுதியில் எத்தனை இலட்சம் மாணவர்கள் தமது கல்லூரிப்படிப்பை முடித்து வெளியேறி இருப்பார்கள் இவர்கள் கல்விகற்ற காலப்பகுதியில் எமது கல்லூரிக்கு அனைத்து சுகாதார வசத்திகளும் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்று இல்லாதிருந்தது அசௌகரியமாகவே இருந்திருக்கும் .இந்த நிலையை ஈடுசெய்யும் வகையில் கல்லூரிக்கு ஒரு சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்காக யுகே பழைய மாணவர் ஒன்றியம் முன்வந்துள்ளது .

பரீட்சை பெறுபேறின் மீளாய்வு

தற்போது வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறின் படி அதனை மீளாய்வு செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பங்கள் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை மீளாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுபேறுகளுடன் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும்.

Friday 1 February 2013

கல்வியை நோக்கி எமது பாதை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் தெரிகிறது. இந்த சந்தர்பத்தில் எமது பாடசாலையின் வளர்ச்சியில் நாம் பங்குகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தை மீட்டுப் பார்க்கிறோம்.