Friday 22 February 2013

இத்தாலி அனுப்புவதாகக் கூறி 50 இலட்சம் ரூபா பணமோசடி

இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம்50 இலட்சம் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
அம்மோசடி தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 50 இலட்சம் ரூபா பணத்தினைப் பெற்று ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.