Wednesday 26 July 2017

பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா .....



பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா August 5 ம், 6 ம் திகதிகளில்  சனி ,ஞாயிறு இரு தினங்கள் பாரதி முன்பள்ளி வளாக 'சுப்பையாஅரங்கில்' நடைபெறவுள்ளது .

இலக்கிய விமர்சன தேசிய மட்ட போட்டியில் விக்ரோரியாக் கல்லூரி மாணவி சி.பிரவீணா 2 ம் இடம்

        2016 இல் புதிதாக அறிமுகம் செய்யப் பெற்ற இலக்கிய விமர்சன  தேசிய மட்ட போட்டியில் விக்ரோரியாக் கல்லூரி மாணவி செல்வி .சிவாஸ்கரன்   .பிரவீணா 2 ம் இடத்தை பெற்றுக் கொண்டார். 

        விக்ரோரியாக் கல்லூரி தமிழ் ஆசிரியை திருமதி.பங்கயச்செல்வி  யோகநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் போட்டிகளில் பங்குபற்றிய செல்வி பிரவீணா . கோட்ட மட்ட போட்டியில் 2 ம் இடத்தினையும் வலய மட்ட போட்டியில் 1 ம் இடத்தினையும் மாகாண மட்டப் போட்டியில் 1 ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Thought For The Day.....


Thought For The Day....


Tuesday 18 July 2017

பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா......

  பாரதி கலை மன்றம் 24-05-1982 இல் உதயமாகி, கவி பாரதி கொண்ட எழுச்சி நடையுடன்  பவனிவந்த 35வது ஆண்டு நிறைவை , விழாவாக்க  மகிழ்வுடன் தயாராகி வருகின்றது. புலம் பெயர் பாரதி சமூகத்தினரின் நல்வரவுடனும்- அவர்களின் பங்கேற்புகளுடனான கலைப்படைப்புகளுடனும் நிகழ்வுகள் மெருகேற்றப்படவுள்ளன.

                                                      புத்தம் புதிய கலைகள்- பஞ்ச
                                                           பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும்;
                                                      மெத்த வளருது மேற்கே-அந்த
                                                           மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
எனும் பாரதியின் ஆதங்கத்தைப் போக்க மேற்குலக புலம்பெயர் உறவுகளின் கலை மேன்மைகளை நாமும் உள்ளீர்த்து புதிய பாதையில் பயணிக்க தயாராகியுள்ளது அரங்கம்.

      நாகலிங்கம் சுப்பையா அவர்கள் நினைவாக அவர்கள் வழித்தோன்றல்களால் நிர்மாணிக்கப்பெற்று 24-05-2014 அன்று கையளிக்கப்பெற்ற "சுப்பையா அரங்கு" அவரது வழித்தோன்றல்களால் மீள்வர்ணம் பூசப்பெற்று மெருகூட்டப்பட்டு வருகின்றது.









     5/08/2017, 6/08/2017 சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்கள், புலம் பெயர் உறவுகளின் வருகைக்காக விழா விரிவாக்கம் கண்டுள்ளது. கலை மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்கள்- மன்ற இசை பயிற்சி வகுப்பு  மாணவர்கள் - மன்ற நடன பயிற்சி வகுப்பு மாணவர்கள் - பாரதி முன்பள்ளி சிறார்கள்-    மன்ற உறுப்பினர்கள்-விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் - பொன்னாலை சந்திர பரத கலாலயத்தினர்-பாரதி சமூக புலம் பெயர் உறவுகள்-எமது கிராமத்தவர்கள் என பலரதும் கலைப் படைப்புகள் அரங்கம் காண உள்ளன.

பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா- இரு நாட்கள் 5 , 6 Aug 2017