Wednesday 26 July 2017

இலக்கிய விமர்சன தேசிய மட்ட போட்டியில் விக்ரோரியாக் கல்லூரி மாணவி சி.பிரவீணா 2 ம் இடம்

        2016 இல் புதிதாக அறிமுகம் செய்யப் பெற்ற இலக்கிய விமர்சன  தேசிய மட்ட போட்டியில் விக்ரோரியாக் கல்லூரி மாணவி செல்வி .சிவாஸ்கரன்   .பிரவீணா 2 ம் இடத்தை பெற்றுக் கொண்டார். 

        விக்ரோரியாக் கல்லூரி தமிழ் ஆசிரியை திருமதி.பங்கயச்செல்வி  யோகநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் போட்டிகளில் பங்குபற்றிய செல்வி பிரவீணா . கோட்ட மட்ட போட்டியில் 2 ம் இடத்தினையும் வலய மட்ட போட்டியில் 1 ம் இடத்தினையும் மாகாண மட்டப் போட்டியில் 1 ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.