Monday 25 February 2013

நினைவஞ்சலி நிகழ்வு - அமரர்.ந.சிவசண்முகமூர்த்தி‏

விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவனும் முன்னாள் ஆசிரயருமான அமரர் நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் கதாப்பிரசங்கக் கலை நூல் மற்றும் நாட்டார் பாடல் இறுவட்டு வெளியீடும் கல்லூரி அதிபர் தலைமையில் றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்.கலாநிதி.நா.சண்முகலிங்கன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.ச.கௌரிகாந்தன், ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் சு.கணபதிப்பிள்ளை, வடமாகாணக் கல்வித் திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ச.கைலாசநாதன், சட்டத்தரணி நா.அரியபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலியுரைகளை வழங்கினார்கள்.