Thursday 15 February 2018

JVC,Encouragement for the students who got university entrance in 2017


சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி (2017) உயர்சித்தி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணணிகள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கும் நிகழ்வு அதிபர் சத்தியகுமாரி சிவகுமார அவர்களின் தலைமையில்  வழமைபோல் அவுஸ்ரேலியா மெல்போர்ன் பழைய மாணவர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரியின் மாணவியும் முன்னாள் ஆங்கில ஆசிரியையுமான திருமதி செல்வராணி தேவராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். முன்னாள் அதிபர் வ.ஸ்ரீகாந்தன் , அவுஸ்ரேலியா மெல்போர்ன் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு ஸ்ரீ குமரன் அவர்களின் துணைவியார் திருமதி அனுராதா , அவரது புதல்வன் திரு.மாலவன்  மற்றும் சுழிபுரம் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு அ.கிருபானந்தமனுநீதி ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். மூன்று மாணவர்கள் மடிக்கணணியும் பத்து மாணவர்கள் தலா இருபதினாயிரம் பணப்பரிசும் பெற்றுக் கொண்டனர்.