Thursday 1 August 2013

யாழ் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, கனேடிய பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கிய கலை மாலைப் பொழு

யாழ் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, கனேடிய பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கிய கலை மாலைப் பொழுது பல்சுவை நிகழ்சிகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.

பிரம்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் 20/07/2013 அன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
சிறப்பு நிகழ்வாக அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த இளங்குமரன் தம்பதிகளின் பிள்ளைகளும், குரு, மீனா, இளங்குமரனின் மாணவர்கள் சதிபன், பவன், ரக்ஷிகா ஆகியோரின் நடனம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது.
வீணாலயம் இசைக்கல்லூரி ஆசிரியை சிறிமதி ஜெயந்தா இரட்ணகுமார் அவர்களுடன் மாணவர்கள் இணைந்து வழங்கிய வீணை இசை கேட்போரின் நெஞ்சங்களை உருகச் செய்தது. நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றன.
See More Photos