Tuesday 26 February 2013

சுழிபுரத்தில் 2 மோட்டார் குண்டுகள் மீட்பு

யாழ்.சுழிபுரம் பகுதியில் பாரிய ஆபத்தினை ஏற்படுத்திக் கூடீய 2 மோட்டார் குண்டுகள் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
யாழ்.சுழிபுரப் பகுதியில் பாவணைக்கு உட்படுத்தப்படாத வெற்றுக் காணி ஒன்றினை துப்பரவு செய்வதற்காக சென்றவர்கள் குறித்த மோட்டார் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

இதன் பின்னர் அப்பகுதி கிராம சேவகர் ஊடாக வட்டுக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் குண்டினை இனங்கண்டனர்.
இதன் பின்னர் சிறிலங்கா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மோட்டார் குண்டுகளை மீட்டுச் சென்றுள்ளனர்.