Monday 5 November 2012

கடற்படையினர் இன்று உத்தியோகப் பூர்வமாகக் வீடுகளை கையளித்துள்ளனர்.

போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்த கடந்த 1990ம் ஆண்டு பொன்னாலை தொடக்கம் மாதகல், கீரிமலை, வலி. வடக்கு காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பகுதிகளை சிறிலங்காப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து இப் பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் உயர் பாதுகாப்பு வலயங்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் பொன்னாலை, மாதகல் மேற்கு ஆகிய பிரிவுகளில் உள்ள பாதுகாப்பு வலயங்களில் குடியமர கடற்படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதனையடுத்து, இன்று பொன்னாலை வரதராஜபெருமாள் கோயிலைச் சூழவுள்ள பகுதியில் மக்களின் வீடுகளை அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறிலங்காக் கடற்படையின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களிடம் வீடுகளைக் கையளித்துள்ளனர்.

See Photos