Monday 29 July 2013

Farewell Party

எமது கல்லூரியிலிருந்து வன்னி மாவட்டத்திற்கும் தீவக வலயத்திற்கும் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வினை கல்லூரி ஆசிரியர் நலன்புரிக் கழகம் இன்று சிறப்பாக நடாத்தியது. கழகத்தின் தலைவர் திரு.கு.ஜேம்ஸ்பஸ்ரியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், இடமாற்றலாகிச் சென்றவர்களின் சேவையைப் பாராட்டிப் பேசினார்கள். திருமதி பங்கயச்செல்வி முகுந்தன் (சங்கீதம்), திருமதி ஜெகதீஸ்வரி சுதர்சன் (ஆங்கிலம்), திரு கணபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தமூர்த்தி (சித்திரம்), திருமதி.வி.ராதிகா (நடனம்), செல்வி.சி.மைதிலி (கிறிஸ்தவம்) ஆகிய ஆசிரியர்கள் பிரியாவிடை பெற்றவர்களாவார். நிகழ்வின் நிறைவில் இவ்வாசிரியர்கள் அன்பளிப்புக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.