Monday 12 August 2013

SriLanka Cricket Association - Cricket Tournament 2013

இலங்கைத் துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் துடுப்பாட்டப்போட்டிகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. எமது கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி முதலாம் கட்டத்தில் கலந்துகொண்ட போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாம் கட்டப் போட்டிகளில் முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி (தேசிய பாடசாலை), சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றுடன் போட்டியிடவேண்டும்.
வெள்ளிக்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியுடன் நடந்த துடுப்பாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய வித்தியானந்தாக் கல்லூரி 212 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 183 ஓட்டங்களை மட்டும் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி 158 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 117 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.விக்ரோறியாக் கல்லூரி சார்பில் செ.கிரிசாந் 31 ஓட்டங்களையும் ப.பிரதீஸ் 29 ஓட்டங்களையும் தி.செந்தூரன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். அ.மிதுசன் 21 ஓட்டங்களைக் கொடுத்து 04 இலக்குகளைக் கைப்பற்றினார்.
ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்காக மு.கார்த்திகேயன் 27 ஓட்டங்களை அதிகமாகப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் இ.சிவராம், ப.பிரதீஸ், சி.கோகுல்ராஜ், வை.கஜன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினர். அடுத்த வாரம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியுடனான போட்டி நடைபெறவுள்ளது.