Wednesday 19 March 2014

A/L Union Get together & Lunch - 2014

எமது கல்லூரியின் உயர்தர மாணவ மன்றத்தின் 44வது வருடாந்த ஒன்றுகூடலும் மதிய போசன விருந்துபசாரமும் அண்மையில் நடைபெற்றன. மன்றத் தலைவி செல்வி.காயத்திரி தேவசுதன் தலைமையிலான இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக “விக்ரோறியன்“ திரு.பா.தனபாலன் தம்பதிகளும் (இணைப்பாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி) சிறப்பு விருந்தினராக “விக்ரோறியன்“ திருமதி.கோமதி பிரணவரூபன் அவர்களும் (சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலந்துகொண்டனர். ஒன்றுகூடல் நிகழ்வுகள் சிவபாதசுந்தரம் கேட்போர் கூடத்திலும், மதிய போசன விருந்துபசாரம் றிஜ்வே மண்டபத்திலும் இடம்பெற்றன. வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் மாணவப் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரியின் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள். திரு.பா.தனபாலன் அவர்கள் கல்லூரி நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். திருமதி.கோமதி பிரணவரூபன் அவர்கள் உயர்தர மாணவ மன்ற வளர்ச்சிக்காக 10,000/- உதவுதொகையாக வழங்கினார். மன்றத்தின் செயலாளர் செல்வன்.இ.ரகுராஜன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதாக நிறைவடைந்தன.

See More Photos