Saturday 13 October 2012

Books Exhibition 2012

எமது கல்லூரியில் நூலக மாதத்தை முன்னிட்டு நேற்றும் இன்றும் ஏராளமான புத்தகங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்று நடாத்தப்பட்டது. கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அயற்பாடசாலைகளைச் சார்ந்தவர்களும் மற்றும் பெற்றோர்களும் பெருமளவில் இக்கண்காட்சியைப் பார்வையிட்டதுடன் தமக்குத் தேவையான நூல்களையும் கொள்வனவு செய்தனர். அண்மையில் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது Prize Voucher பெற்ற மாணவர்கள் Voucherகளைச் சமர்ப்பித்து தமக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவதற்கும் இக்கண்காட்சியின் போது ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இணுவில் மகுடம் புத்தகசாலையினர் இக்கண்காட்சியினை ஒழுங்குபடுத்தியிருந்தனர். கல்லூரி நூலக ஆசிரியர்களான திரு.கு.ஜேம்ஸ் பஸ்ரியன், திருமதி.ராதிகா பாலமுரளி ஆகியோர் பொறுப்பாகச் செயற்பட்டனர்.

See Photos