Saturday 17 November 2012

Art Exhibition 2012

சென்ற வாரம் விக்ரோறியாக் கல்லூரியின் ஓவிய மன்றம் நடாத்திய “ஓவியச் சாளரம்” கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள்...

Earlier News Published on 10/11/2012

விக்ரோறியாக் கல்லூரியின் சித்திர ஆசிரியரும் மாணவர்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் சித்திரக் கண்காட்சியானஓவிய சாளரம்” இன்று யா/யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பமானது. பிரதம விருந்தினராக கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி.பெப்சி மரியதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இராஜேந்திரன் அவர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

500க்கும் அதிகமான பல்வேறு வகையான கண்கவரும் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் சித்திரம்சார் கைவேலைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல நூற்றுக்கணக்கானவர்கள் இக்கண்காட்சியைக் கண்டுகழித்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமையும் இது தொடரும்.