Sunday 11 November 2012

Environmental Club‏

விக்ரோறியாக் கல்லூரியின் சுற்றாடல் சூழல் பாதுகாப்பு படையணியினரின் சின்னஞ்சூட்டும் விழா சென்ற வெள்ளிக் கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இப்படையணியில் 25 இளம்சிறார்கள் சின்னஞ்சூட்டப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து புதிதாக இணைந்து கொண்டனர். இப்படையணி பாடசாலையின் சுற்றாடல் சூழலையும் தாம் வாழும் இடங்களின் சுற்றாடல் சூழலையும் சுகாதார நிலைக்கேற்ப பேணி பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இலங்கையின் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் உருவாக்கப்பட்ட சூழல்பாதுகாப்புப் படையணி சிறப்பாக செயற்படும்போது இதன் அங்கத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி உறுதிப்படுத்தப்படும். இப்படையணி உள்ள பாடசாலைகள் வருடாந்தம் “சிறந்த ஆரோக்கியமான சுற்றாடலைக் கொண்ட பாடசாலை” என்ற விருது வழங்கும் திட்டத்திற்குள் இணைக்கப்படுகின்றன.

See Photos