Saturday 1 December 2012

மரண அறிவித்தல்-திரு அம்பலவாணர்

எமது கல்லூரியில் 1960ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை 38 வருடங்கள் ஆய்வுகூட உதவியாளராக நிறைந்தபணி செய்த திரு.கே.அம்பலவாணர் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
கல்லூரியின் உயர்தர, இடைநிலை ஆய்வுகூடங்களை சிறப்பாக பராமரித்தும் பாதுகாத்தும் வந்ததுடன் தேவைப்படுகின்றபோதெல்லாம் விஞ்ஞான செய்முறைகளை மேற்கொள்ள துறைசார் ஆசிரியர்களுக்கு மிகுந்த உதவியாகவும் ஆதரவாகவும் செயற்பட்ட இவர் சுமார் பத்து அதிபர்களுக்குக் கீழ் சேவைசெய்து கல்லூரிச் சமூகத்தின் அபிமானத்தைப் பெற்றவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றோம்.

விக்ரோறியாக்கல்லூரிச் சமூகம்

Earlier News

சுளிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் நீண்டகாலமாக (38 வருடங்கள்) ஆய்வுகூட உதவியாளராகக் கடமையாற்றிய ' வாணர்" என அழைக்கப்படும் திரு அம்பலவாணர் இறைபதமடைந்துவிட்டார்.
கடமையுணர்வும் நேரந்தவறாமையும் ஆங்கிலப்புலமையும் கொண்ட இவர் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களினதும் அன்பைப்பெற்றவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய யூ கே பழைய மாணவர் சங்கம் இறைவனைப் பிரார்த்திக்கிறது.