Sunday 9 December 2012

நாடகப் பயிற்சிப்பட்டறை நிகழ்வு

சுழிபுரம் விக்ரோரியாக்கல்லூரி மாணவர்களுக்கான அரசாங்கத்திறன் விருத்தி நாடகப் பயிற்சிப்பட்டறை நிகழ்வு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
புத்தாக்க அரசாங்க இயக்கத்தினால் நடாத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறை நிகழ்வின் வளவாளர்கள் புத்தாக்க அரசாங்க இயக்கப் பணியாளரும் ,யாழ்ப்பாண மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ் .ரி .குமரன் அவர்கள் புத்தாக்க அரசாங்க இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரும் ,மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ் .ரி .அருள்குமரன் ஆற்றுகையாளர் எஸ் .லோன்சன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சிப் பட்டறையை திறம்பட வழிநடாத்தினார்கள் .
இப்பயிற்சிப் பட்டறையில் நாடகத்தயாரிப்பு படிமுறை ,அரங்கத்திறன்விருத்தி ஆளுமை வளர்ச்சிசார் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .இப்பயிர்ச்சிப் பட்டறையில் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .பயிற்சிப் பட்டறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்பயிர்ச்சிப் பட்டறை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது மிகவும் பயனுள்ள முறையில் அமைந்ததுடன் புதிய அனுபவங்களையும் அரங்கியல்சார் நுட்பங்களையும் அறிந்துகொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்கள் .