Monday 14 January 2013

பொங்கல் விழா - 2013

எங்கள் கல்லூரியில் கோவில் கொண்டுள்ள சிவகாமி சமேத நடராஜருக்கு தைப்பொங்கல் திருநாளாகிய இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்றன. இந்து மாமன்றப் பொறுப்பாசிரியர் திரு.இ.இராஜமுகுந்தன் அவர்களின் வழிப்படுத்தலில் ஆசிரியர்களும் மாணவர்களும் பொங்கல் பொங்கி விசேட பூஜைகள் நடாத்தி தைப்பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவ்வேளையில் அவுஸ்திரேலியாவிலிருந்து கல்லூரிக்கு வருகை தந்த 'விக்ரோறியன்' சத்தியகீர்த்தி குடும்பத்தினரும்
 'விக்ரோறியன்' ரவீந்திரன் (Lecturer, Teachers' Training College, Maharagama) அவர்களும் பாரியார் சத்தியமலர் அவர்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
See Photos