Friday 25 January 2013

வருடாந்த மெய்வல்லுனர் போட்டி(2013)

விக்ரோறியாக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியை முன்னிட்டு இன்றைய தினம் மரதனோட்ட நிகழ்ச்சி இடம்பெற்றது. சுமார் தொண்ணூறு மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டி கல்லூரி முன்றலில் ஆரம்பித்து வழக்கம்பரை, சித்தங்கேணி, மாவடி, மூளாய் சந்தி ஊடாக சுழிபுரம் சந்தியை சென்றடைந்து கல்லூரி முன்றலில் நிறைவடைந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள்,
பழைய மாணவர்கள், பெற்றோர் என அதிகளவிலானவர்கள் வீதியோரங்களில் கூடிநின்று வீரர்களுக்கு உற்சாகமளித்தனர்.
 எண்பத்திஐந்து மாணவர்கள் போட்டியை முழுமையாக நிறைவுசெய்தனர். நிறைவுசெய்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் இல்ல மெய்வன்மைப்போட்டியின் போது வழங்கப்படவுள்ளது.