Thursday 24 January 2013

முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா கௌரவிப்பு‏


விக்ரோறியாக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இக்கௌரவிப்பினை அவுஸ்ரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் நாடுகளிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
அவுஸ்ரேலியாவிலிருந்து திரு.அ.நித்தியானந்தமனுநீதி, திரு.சு.சத்தியகீர்த்தி, கனடாவிலிருந்து திரு.இ.விஜியநாதன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து திரு.அ.தயாபரன் மற்றும் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.பா.விஜயகுமார், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.இ.ஸ்ரீரங்கன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதி அதிபர் திரு.எஸ்.கே.இந்திரராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுச் சின்னங்கள் வழங்கி சிறப்பளிக்கப்பட்டார்.