Friday 5 April 2013

மாணவர்களுக்கு பாராட்டுக்கள்


சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் 2012ஆம் ஆண்டு G.C.E O/L பரீட்சைஎழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது .இப்பரீட்சையில் பல மாணவர்கள் திறமைச் சித்திகளை பெற்றுள்ளார்கள் .இவர்களுள் செல்வன் .இராஜதுரை -சிவராமன் ,செல்வி .டிலச்சனா -பன்னீர்ச்செல்வம் இருவரும் எல்லாப்பாடங்களிலும் 9A களையும் எடுத்து எமது கல்லூரிக்கு புகழைத் தேடித்தந்துள்ளார்கள் .அத்துடன் ஆங்கிலப்பிரிவிலும் மாணவர்கள் மிகவும் திறமைச் சித்தி பெற்றுள்ளார்கள் .
இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது .இம்மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளுக்காக ஊக்கமும் ,ஆக்கமும் கொடுத்த எமது கல்லூரி அதிபர் திரு.வி .ஸ்ரீகாந்தன் அவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது ஒன்றியம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது .தொடர்ந்தும் எமது மாணவர்களின் கல்விக்கும் ,விளையாட்டிற்கும்  U.K பழைய மாணவர் ஒன்றியம் என்றும் ஒத்துழைப்பு வழங்கும் .

நன்றி
காரியதரசி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .