Saturday 20 June 2015

ஜனாதிபதி சாரணர் விருது

எமது கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனும் சிரேஸ்ட மாணவ முதல்வனுமாகிய செல்வன்.இ.நிரோஜன், ஜனாதிபதி சாரணர் விருதினைப் பெற்றுள்ளார். கடந்த மூன்று தசாப்தத்தின் பின் இவ் விருதினை எமது கல்லூரி மாணவன் பெற்றுள்ளமை சிறப்புக்குரியதாகும். இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் திரு.க.அருணாசலம் அவர்கள் அதிபராகவும் திரு.குணரத்தினம் அவர்கள் சாரணப் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றிய காலத்தில் திரு.சி.சீனிவாசகம் அவர்கள் ஜனாதிபதி சாரணர் விருதினைப் பெற்றதன் பின் செல்வன்.இ.நிரோஜன் அவர்கள் பிரதி அதிபரும் சாரணப் பொறுப்பாசிரியருமான திரு.செ..சிவகுமாரன் அவர்களின் வழிப்படுத்தலில் இவ் விருதினை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். கல்லூரியின் தலைமைச் சாரணனாகச் செயற்படும் நிரோஜன் கல்வி மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் முன்னிலையில் உள்ளவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
See More Photos

தகவல் : திரு ஸ்ரீ காந்தன் (முன்னாள் அதிபர் )