Tuesday 9 April 2013

Parents Day

சென்ற வெள்ளிக்கிழமை இவ்வாண்டுக்கான முதலாம் தவணைச் செயற்பாடுகள் நிறைவுற்று கல்லூரி விடுமுறைகள் ஆரம்பமாகின. அன்றைய தினம் முதலாம் தவணை பரீட்சையில் முதன்மை நிலைகளைப் பெற்ற மாணவர்களும் உச்ச புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டு ஊக்குவிப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அன்று பெற்றோரகள் கல்லூரிக்கு வருகை தந்து தமது பிள்ளைகளின் பரீட்சை விடைத்தாள்களைப் பார்வையிட்டு, வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தேர்ச்சி அறிக்கைகளைப் பெற்றுச் சென்றனர்.