Thursday 2 May 2013

எமது கல்லூரிக்குச் சென்று பார்வையிட்ட பழைய மாணவன்



30.04.2013 அன்று கனடா பழைய மாணவர் சங்கத்தின் காரியதரசி திரு .ஜெயகாந்தன் அவர்கள் தனது தாயாரின் இழப்பிற்கு மத்தியிலும் தனது தாயாரின் இறுதிச்சடங்கை கொழும்பில் நடாத்திவிட்டு எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கு  நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு ,கல்லூரி அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் அவர்களுடனும் ,கல்லூரி நிர்வாகத்துடனும் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார் .அதன் பின் கல்லூரியில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் கண்டறிந்துள்ளார் .அத்துடன் மைதான விஸ்தரிப்பு கைச்சாத்திடும் ஒப்பந்தத்திலும் கலந்து கொண்டார் .தனது தாயாரின் இழப்பிற்கு மத்தியிலும் தான் கல்வி கற்ற கல்லூரிக்கு மறக்காமல் சென்று பார்வையிட்டது வரவேற்கத்தக்க விடயமாகும் .