Wednesday 12 June 2013

வைரவிழாக் கொண்டாடும் எமது முன்னாள் அதிபர்


அகவை அறுபதில் அருந்தவச்செல்வி
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் முன்னைநாள் மதிப்பிற்குரிய அதிபர் .திருமதி . .வேலுப்பிள்ளை அவர்கள் தனது அறுபதாவது பிறந்ததினவிழாவாகிய வைரவிழாவை இன்று விமர்சையாகக் கொண்டாடுகின்றார் .அதிபர் அவர்கள் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் விஞ்ஞானபாட ஆசிரியராக இருந்து பின்னர் இக்கட்டான காலகட்டத்தில் அதிபராக பதவியேற்று கல்லூரியின் முழு வளர்ச்சிக்கும் அயராது உழைத்தவர் ஆவார்.

எமது கல்லூரியை  முதன்மை நிலைக்குக் கொண்டுவர அரும்பாடுபட்டவரும் இவரே .அதிபர் அவர்கள் சுழிபுரம் வாழ் மக்களின் இதயங்களில் குடிகொண்டவராவார் .வைரவிழா கண்டுள்ள எமது அதிபர் திருமதி . .வேலுப்பிள்ளை அவர்களுக்கு கல்லூரி அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பழைய மாணவர்கள் மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அனைவரும் தமது இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .

"நீடூழி காலம் வாழ்க வளமுடன்"

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photo