Friday 21 June 2013

கல்லூரியின் வளர்ச்சிக்கு கைகொடுப்போம்


விக்ரோறியா அன்னையின் செல்லப்பிள்ளைகளாக வெளிநாடுகளில் வசித்துவரும் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்களே ! எமது கல்லூரியில் கல்வி கற்று வரும் மாணவ ,மாணவிகள் மாவட்ட ரீதியிலும்,மாகாண ரீதியிலும் வெற்றி பெற்று தேசிய மட்ட ரீதியிலும் விளையாட்டுகளில் பங்கு பற்றி வெற்றி பெற்று வருகின்றார்கள் .
குறிப்பாக துடுப்பாட்டம் ,உதைபந்தாட்டம் ,கரப்பந்தாட்டம் ,எல்லே போன்ற விளையாட்டிக்களில் தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்கள் .இவ்வெற்றியின் மூலம் எமது விக்ரோறியாக்கல்லூரி யாழ் மாவட்டத்தில் ஒரு முதன்மைக் கலவன் கல்லூரியாக வளர்ச்சி அடைந்து வருகின்றது .
எமது கல்லூரி  மாணவர்கள் மிகவும் சிறப்பாக வெற்றி பெற்று வருவது வெளிநாடுகளில் வசித்து வரும் எமக்கு மிகவும் பெருமையைத் தருகின்றது .முதலில் இவ்விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு அதிபர் ,ஆசிரியர்கள் ,சக மாணவர்கள் ,பழைய மாணவர்கள் மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் யாவரு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
அன்பான வெளிநாடுகளில் வசித்துவரும் பழைய மாணவர்களே ! எமது கால்லூரி மாணவச் செல்வங்கள் தமது திறமைகளை கல்ல்வியிலும் ,விளையாட்டிலும் வெளிக்கொணர்வதற்கு அயராது உழைத்து வருகின்றார்கள் .அவர்களின் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்தோம் சற்று சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்ப்போம் ................................
மாணவர்கள் வெளிமாவட்டங்களில் பங்குபற்றும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு செலவீனங்களுக்கு கல்லூரியின் வருமானம் பற்றாக்குறையாக உள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்களே !
நீங்களும் முன்வந்து கல்லூரி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள்.

கல்லூரி சமூகம்
நன்றி .