Sunday 21 July 2013

Grade - 05 Scholarship Exam - Preparation Seminar

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் செயலமர்வு எமது கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. எமது கல்லூரி ஊட்டல் பாடசாலைகளின் மாணவர்கள் உட்பட வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இச் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். சக்தி FM மற்றும் செலான் வங்கி என்பவற்றின் அனுசரணையுடன்  இடம்பெற்ற இப் பரீட்சை வழிகாட்டல் நிகழ்வின் வளவாளர்களாக வவுனியா மத்திய மகா வித்தியாலய ஆசிரியரும் விக்ரோறியனுமாகிய திரு.ச.செல்வரத்தினம் உட்பட பலர் பங்குகொண்டனர். சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், எமது கல்லூரியின் அதிபர், ஆசிரிய ஆலோசகர் போன்றோர் மங்கல விளக்கேற்றி, ஆசியுரை வழங்கி செயலமர்வினை ஆரம்பித்து வைத்தனர்.