Monday 23 September 2013

சிறுகதைப் போட்டி

நோர்வே முத்தமிழ் கலா மன்றம் தனது 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் எமது கல்லூரி தரம் 10 மாணவன் ஐங்கரன் 5ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். நூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்குபற்றிய இப் போட்டியில் ஐங்கரன் பெற்ற வெற்றியை கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது நோர்வேயில் வசிப்பவருமான திரு.சக்திவேல் அவர்கள் நேரில் வந்து கௌரவித்தார். திரு.திருமதி.சக்திவேல் இருவரும் மாணவனுக்குப் பரிசு வழங்கி மகிழ்ந்தனர். அத்துடன் இம்மாணவனை வழிப்படுத்திய ஆசிரியை செல்வி.ஜெயமலர் அவர்களையும் சந்தித்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
See More Photos