Tuesday 28 January 2014

Bicycle & School Equipment - Distribution

எமது கல்லூரியில் பயிலும் 15 மணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் 30 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. SAVE THE CHILDREN அமைப்பின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட இப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதில் ”விக்ரோறியன்” ரவிமோகன் (சிறுவர் பாதுகாப்ப, உள சமூக உத்தியோகத்தர், வலி மேற்கு பிரதேச செயலகம்), ”விக்ரோறியன்” சிவரூபன் (கிராமசேவையாளர்) ஆகியோர் பெருமளவில் உதவினர். இப் பொருட்கள் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச செயலக நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.சிவகுமார் அவர்களும் ”விக்ரோறியன்” ரவிமோகன் அவர்களும் SAVE THE CHILDREN அமைப்பின் சார்பில் செல்வி.எஸ்.தயானி அவர்களும் கலந்து கொண்டனர். பொருளாதார நிலையில் பின்தங்கிய, கல்வி ஊக்கம் உள்ள மாணவர்கள் இதற்கெனத் தெரிவுசெய்யப்பட்டனர்.