Monday 13 January 2014

அமரர் திரு .கதிரவேலு – நடராஜா அவர்களின் இறுதிச் சடங்கு .

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால  உறுப்பினரும் ஒன்றியத்தின் முன்னாள் பொருளாளருமாகிய அமரர் திரு .கதிரவேலு –நடராஜா அவர்களின் இறுதி கிரியைகள் 12-01-2014 அன்று இலண்டனில் நடைபெற்றது .
அன்னாரின் இறுதிச் சடங்கிற்கு சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள் .அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் சில விக்ரோறியன்கள் வருகை தந்து கிரியையில் கலந்து கொண்டார்கள் .அன்னாரின் பூதவுடல் பேழை  யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் கொடியால் போர்க்கப்பட்டு கொண்டு வரப்பட்டது .அத்துடன் இறுதிச் சடங்கில் அன்னாரின் குடும்பத்தின் சார்பில் அவரின் பேர்த்தியும் ,உறவினர்கள் சார்பில் திரு .த . உலகநாதன் அவர்களும் ,விக்ரோறியாக்கல்லூரி யுகே  பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில்  ஒன்றியத்தின் உபதலைவர் திரு .சு . ஸ்ரீனிவாசன் அவர்களும் ,விக்ரோறியாக்கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்களின் அனுதாபச் செய்தியை ஒன்றியத்தின் காரியதரசி திரு .தா .கமலநாதன் அவர்களும் அன்னாரின் சிறப்புக்களைப் பற்றி எடுத்துரைத்தார்கள் .
மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றிய அங்கத்தவர்களின் சார்பில் “LOYAL VICTORIAN” என்ற மலர்வளையமும் ,கண்ணீரஞ்சலி பிரசுரமும் வெளியிடப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்து விக்ரோறியங்களின் அனுதாபங்கள்
                                         சாந்தி சாந்தி சாந்தி

யுகே பழைய மாணவர் ஒன்றியம் 

See More Photos