Tuesday 28 January 2014

Chess Competition

வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படும் சதுரங்கப் போட்டிகளின் முதற்கட்டம் கோட்டமட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்றது. சங்காளைக் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மேற்படி போட்டிகள் விக்ரோறியாக் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. பெருமளவிலான மாணவர்கள் பங்கு கொண்ட இப் போட்டிகள் தனித்தனி வயதுப்  பிரிவுகளாக நடாத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற பத்து மாணவர்கள் வலய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதிகளவிலான வெற்றிகளை விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர். போட்டிகளின் நிறைவில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் ஆளுநர் செயலக அலுவலர்களின் அழைப்பின் பேரில் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் வழங்கி கௌரவித்தார்.