Saturday 1 February 2014

மரதனோட்டம் 2014

எமது கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகளின் முன்னோடியாக நேற்றைய  தினம் மரதனோட்டம் நடைபெற்றது. இதில் பங்குபற்ற விண்ணப்பித்த மாணவர்களில் உடற்றகுதியுள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள். பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டி கல்லூரி முன்றலில் ஆரம்பமாகி சித்தன்கேணி சந்தியை அடைந்து அங்கிருந்து மாவடிச் சந்தி சென்று பின் மூளாய் சந்தியுடாக சுழிபுரம் காளுவன் சந்திக்கு வந்து மீண்டும் கல்லூரி வாசலில் நிறைவடைந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் மிகுந்த ஆதரவு வழங்கிய இம் மரதனோட்டப் போட்டியில் வெற்றிபெற்றவ|ர்களுக்கு “விக்ரோறியன்” திரு.இ.ஸ்ரீரங்கன் அவர்களின்அனுசரணையில் பணப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.போட்டியின் முடிவில் ஆசிரியர், பழைய மாணவர் மற்றும் உதவியாளர்களுக்கு காலை உணவு U.K பழைய மாணவர் ஒன்றிய தினூடக  “விக்ரோறியன்” திரு.இரவிசங்கர்  அவர்களின்   அனுசரணையில் பரிமாறப் பட்டது.