Sunday 16 March 2014

இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை

எமது கல்லூரியிலிருந்து இவ்வருட ஆரம்பத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட 19 ஆசிரியர்களுக்கான பிரியாவிடை அண்மையில் கல்லூருியின் சிவபாதசுந்தரம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒரே பாடசாலையில் 7 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் 15 ஆசிரியர்களும் வருடாந்த இடமாற்றத்தின் கீழ் 3 ஆசிரியர்களும் ஆசிரிய ஆலோசகராக கடமையேற்று சென்ற ஒரு ஆசிரியருமாக இவர்கள் 19 பேரும் உள்ளனர். ஆசிரியர் கழகத்தினால் ஓழுஙகமைக்கப்பட்ட இந் நிகழ்வு கழகத் தலைவர் திரு.கு.ஜேம்ஸ் பஸ்ரியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் உட்பட பல ஆசிரியர்களும் இடமாற்றலாகிச் சென்ற இவர்களின் சேவையினைப் பாராட்டி உரையாற்றினர். 
மாலைசூடி பரிசுகள் வழங்கி இவ்வாசிரியர்கள் கௌரவம் செய்யப்பட்டனர். தாம் இக் கல்லூரியில் சேவையாற்றிய இனிய நினைவுகளை மீட்டு இடமாற்றம் பெற்ற எல்லா ஆசிரியர்களும் பதிலுரை வழங்கினார்கள். நிறைவாக அதிபர் அவர்களால் மதிய போசன விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை, முன்னாள் பிரதி அதிபர் திரு.சண்முகநாதன் உட்பட சமீப காலங்களில் ஓய்வுபெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர். இப்பிரிவுபசார கௌரவிப்பு நிகழ்வுக்கு ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியமும் அவுஸ்ரேலியா (மெல்போன்) பழைய மாணவர் சங்கமும் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.