Sunday 16 March 2014

கரப்பந்தாட்டம்‏

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயது ஆண்கள் அணி முதலிடம் பெற்று சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் பலம் பொருந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் முதலாம் சுற்றில் 25:16 என்ற புள்ளிகளும் இரண்டாம் சுற்றில் 25:15 என்ற புள்ளிகளும் பெற்று விக்ரோறியாக் கல்லூரி அணி முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. 
அதேவேளை 19 வயது ஆண்கள் அணி வலகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. 
இவ்விரு அணிகளும் யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன.