Sunday 8 June 2014

கரப்பந்தாட்ட அணி கௌரவிப்பு

எமது கல்லூரியின் 17 வயது கரப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டமை தெரிந்த விடயமாகும். இவ்வணி வீரர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திருமதி.ச.சிவகுமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் கல்லூரி நுழைவாயிலிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்களின் கரகோசத்துடன் அழைத்துவரப்பட்டனர்.

கௌரவிப்பின் போது பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன், கரப்பந்தாட்ட அணிப் பொறுப்பாசிரியர் திரு.க.திருக்குமாரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். 

இவ்வணியின் பயிற்றுநராக திரு.செந்தூரன் அவர்கள் பணியாற்றி வருகின்றார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசியமட்டப் போட்டிகளில் செல்வன்.சாந்தராஜ் தலைமையிலான இவ் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.