Sunday 8 June 2014

Milo Cup 2014 - Netball Champions

மைலோ நிறுவனம் நடாத்திய 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகளில் எமது கல்லூரி அணி யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளில் சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பலம் வாய்ந்த வலைப்பந்தாட்ட அணிகளைக் கொண்ட பாடசாலைகள் எனக் கருதப்படும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி போன்றவற்றை வெற்றி கொண்டு யாழ்ப்பாண மாவட்டச் சம்பியன்களாக விக்ரோறியா அணி வெற்றிபெற்றுள்ளது. 

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை 19:14 புள்ளிகள் என்ற நிலையிலும் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தை 16:14 என்ற அடிப்படையிலும் இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை 20:19 என்ற புள்ளிகளின் அடிப்படையிலும் இவ் வெற்றிகள் பெறப்பட்டுள்ளன. 

இதன் மூலம் தேசிய ரீதியில் நடைபெறவுள்ள வலைப்பந்தாட்டப் போட்டிகளில் எமது கல்லூரி பங்குபற்றத் தெரிவாகியுள்ளது.