Monday 23 July 2012

இரசாயனவியல் கட்டுரைப் போட்டி

 
அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட இரசாயனவியல் கட்டுரைப் போட்டியில் தேசிய மட்டத்தில் யா/விக்ரோறியாக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் இருவர் ஆங்கில மொழி மூலம் இப்போட்டிக்குத் தோற்றியவர்களாவர். செல்வி. கார்த்திகா இந்திரகுமாரன் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
செல்வி. காருண்யா ஸ்ரீகிருஷ்ணராஜா தேசிய ரீதியில் ஏழாம் இடத்தைப் பெற்று திறமைச் சித்தியை அடைந்துள்ளார். வடமாகாணத்தில் இம்மாணவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர தமிழ்மொழி மூலம் இப்போட்டிக்குத் தோற்றியவர்களில் விக்ரோறியாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வி. நிரோசனா ஸ்ரீரங்கன் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தைப் பெற்று திறமைச்சித்தியை அடைந்துள்ளார். இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.