Saturday 4 August 2012

Cricket Tournament

விக்ரோறியாக் கல்லூரிக்கும் திரு இருதையக் கல்லுரிக்கும் இடையில் நடைபெற்ற அகில இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தின் துடுப்பாட்டப்போட்டியில் விக்ரோறியா அணி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. திரு இருதையக் கல்லூரி பெற்ற 220 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 104 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.
துடுப்பாட்டச் சங்கத்தால் நடாத்தப்படும் சுற்றுப் போட்டியில் இரண்டாம் சுற்றில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு நாளை ஞாயிற்றுக் கிழமை சாவகச்சேரி இந்துக் கல்லூரியுடன் (National School) பங்குபற்றும் துடுப்பாட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரி வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.