Thursday 23 August 2012

மரண அறிவித்தல் - இ.சங்கர் (செங்காரபிள்ளை) (உரிமையாளர், பாரதி பதிப்பகம்)



சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த பத்திரிகையாளரும், பாரதி பதிப்பக உரிமையாளருமாகிய இ.சங்கர் நேற்று (23.08.2012) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற பூரணபாக்கியத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இந்திரராசாசெல்லம்மா தம்பதியரின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் தையல்நாயகி தம்பதியரின் அன்பு மருமகனும், கலாநிதி, அறிவழகன் (கணித புள்ளிவிவரவியல்துறை யாழ். பல்கலைக்கழகம்), வைத்தியகலாநிதி அறிவுச் செல்வன் (யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமதி தயாநீ, வைத்தியகலாநிதி கலைமகள் (கண்டி போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனும், ஆரபி, இலக்கியா, அறிவுஆதித்தன், அறிவுஅரங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஆனைப்பந்தி நாவலர் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை 25.08.2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மு.ப 10 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :செ. அறிவழகன் (மகன்).
தொடர்புகளுக்கு
செ. அறிவழகன் (மகன்). - 273/1, நாவலர் ஒழுங்கை, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.                                                
,