Monday 31 December 2012

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம்; கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாட்டில் உள்ள 102 தேசிய பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவத்துள்ளது.

அதன்படி புதிதாக அதிபர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் தரம் ஒன்றில் உள்ளவர்களையே புதிதாக சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் புதிதாக அதிபர்களை இணைத்துக் கொள்வதில் பல்வேறு காரணங்களினால் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.