எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக கல்லூரியின் பழைய மாணவியான திருமதி.றோகினி மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார். அண்மையில் திருமதி.றோகினி குடும்பத்தினரும் திருமதி.றாகினி சிவகுமாரும் கல்லூரிக்கு வருகை தந்து உதவி பெறும் மாணவியுடன் கலந்துரையாடி கற்றலுக்காக அவரை ஊக்குவி்த்தனர். கல்விக்காக தொடர்ந்தும் அம்மாணவிக்கு தமது உதவி கிடைக்கும் என உறுதியளித்தனர். றோகினியும் றாகினியும் பண்ணாகம், வைத்திய கலாநிதி அமரர்.கைலாசப்பிள்ளை அவர்களின் புதல்விகளாவர்.