Monday 24 December 2012

EDC Completing another project-Naavalar Children's Park Opening

 சுழிபுரம் நாவலர் முன்பள்ளிக்கான சிறுவர் விளையாட்டுத்திடல் இன்று உத்தியோகபூர்வமாக சிறுவர்களின் பாவனைக்குக்  கையளிக்கப்பட்டது. சுழிபுரம் கல்வியபிவிருத்திக்கழகம் (E D C ) இம்முன்பள்ளியின் நீர்விநியோகத்திட்டத்திற்கு விக்டோரியா கல்லூரியின் யூ கே பழைய  மாணவர ஒன்றியத்தினூடாக உதவியிருந்தது எல்லோரும் அறிந்ததே.  முன்பள்ளி நிருவாகத்தின் இன்னுமோர் வேண்டுகோளான சிறுவர் விளையாட்டுத்திடல் மிகவும் குறுகிய காலத்துள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது . இதற்கான நிதியுதவியினை கனடாவைச்சேர்ந்த திருவாளர்களான தயானந்தா, சித்திரானந்தா, ஜெயகாந்தன், தாரகன், சுதர்சன் ஆகியோருடன் அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த திரு செந்தில்நாதனும் வழங்கியுள்ளனர்.
நாவலர் சனசமூக நிலைய தலைவர் திரு நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் E D C தலைவரும் விக்டோரியா கல்லூரியின் அதிபருமான  திரு சிறிகாந்தன் 
பொருளாளர் திரு ரவீந்திரன், செயலாளர் Dr கண்ணதாசன், அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த திரு திருமதி Dr ராமச்சந்திரன், அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்த திரு மனுநீதி மற்றும் செந்தில்நாதன் EDC வெளிநாட்டு இணைப்பாளரும் ஓய்வுபெற்ற உப அதிபரும் ஆகிய திரு இந்திரராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  
விருந்தினர்களின் உரையைத்தொடர்ந்து Dr ராமச்சந்திரன் நாடாவினை வெட்டி விளையாட்டுத்திடலைத்திறந்து வைத்தார்.
சிறுவர்கள் குதூகலத்துடன் விளையாடியது மனநிறைவைத்தந்தது. இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

See Photos